மஞ்சி தேசிய சுப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டி: ஆடவர் பிரிவில் துறைமுக அதிகார சபையும் மகளிர் பிரிவில் விமானப்படையும் சம்பியனாகின

Published By: Vishnu

06 Jan, 2025 | 07:12 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மஞ்சி  தேசிய  சுப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டியில் ஆடவர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும் மகளிர் பிரிவில் இலங்கை விமானப்படை அணியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.

வெண்ணப்புவை சேர் அல்பர்ட் பீரிஸ் உள்ளக அரங்கில் இறுதிப் போட்டிகள் கடந்த வார இறுதியில் நடத்தப்பட்டது.

ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இலங்கை மின்சார சபை அணியும் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும் மோதின.

அப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி  3 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானது.

முதலாவது செட்டில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இலங்கை துறைமுக அதிகார சபை 25 - 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றது.

அடுத்த செட்டில் துறைமுக அதிகார சபை அணியிடம் சிறு சவாலை எதிர்கொண்டபோதிலும் 25 - 22 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை துறைமுக அதிகார சபை வெற்றிபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. இறதியில் 25 - 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபை வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.

ஆடவர் பிரிவில் பெறுமதி வாய்ந்த  வீரர்   விருதை இலங்கை துறைமுக அதிகார சபையின்  லசிந்து மெத்மல் வசன்தப்ரிய வென்றெடுத்தார்.

மகளிர் பிரிவில் விமானப்படை

சம்பியன் பட்டத்தை சூடியது

இலங்கை விமானப்படை அணிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கும் இடையில் நான்கு செட்கள்வரை நீடித்த மகளிர் இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற விமானப்படை சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

முதலாவது  செட்டில்  மிகச் சிறந்த நுட்பத்திறனுடன் விளையாடிய விமானப்படை 24 - 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்ற விமானப்படை 25 - 20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது செட்டில் விமானப்படைக்கு சவால் விடுத்து விளையாடிய இலங்கை துறைமுக அதிகார சபை 25 - 14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

ஆனால் நான்காவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய விமானப்படை 25 - 18 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மகளிர் பிரிவில் பெறுமதிவாய்ந்த வீராங்கனை விருதை இலங்கை விமானப்படையின்  சத்துரிக்கா கயனி ரணசிங்க வென்றெடுத்தார்.

ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சிறந்த செட்டர், லிபெரோ உட்பட ஒவ்வொரு நிலைகளுக்குமான சிறந்த வீர, வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த இரண்டு பிரிவுகளிலும் இராணுவ அணிகள் மூன்றாம் இடத்தைப் பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04