பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல்

Published By: Vishnu

06 Jan, 2025 | 03:53 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் கடந்த காலங்களில் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் ,சட்ட வரைவினை விடயதானத்துக்கு பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் நடத்துவது அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டமூலத்தை வெகுவிரைவாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலால் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25