(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முற்போக்கு சிந்தனையுடன் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், தேசிய மக்கள் சக்திக்கு அதற்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
சுகாதாரத்துறைக்கு தனியாரின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடா அல்லது தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடா அல்லது நலிந்த ஜயதிஸ்ஸவின் தனிப்பட்ட நிலைப்பாடா என்பது தெரியாது? ஆனால் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகப் பாரதூரமானதாகும். 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று மாத்திரம் தரையில் இறங்கி வேலை செய்வதற்கும், இந்த வேலைத்திட்டம் நிறைவு பெறும் வரை தரையிலேயே வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.
எனவே நாம் இது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இத்திட்டம் நிறைவடையும் வரை எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களால் இந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரியதாகும்.
'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற தொனிப்பொருள் சிறந்ததாகும். ஆனால் இதன் உள்நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த வேலைத்திட்டத்தை முதலில் தேசிய மக்கள் சக்திக்குள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM