மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை

04 Jan, 2025 | 11:09 AM
image

மொனராகலை,புத்தல பிரதேசத்தில் முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, புத்தல பிரதேசத்தில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

இதன்போது இந்த பெண் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்க மாலை, தோடுகள் மற்றும் பணப் பையிலிருந்த 15 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில்  புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42