அநுராதபுரத்தில் வீடொன்றில் புதையல் தோண்டிய நால்வர் கைது !

Published By: Digital Desk 2

03 Jan, 2025 | 04:00 PM
image

அநுராதபுரம், மிஹிதுபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டியதாக கூறப்படும் வீட்டின் பெண் உரிமையாளர் உட்பட நால்வர் நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிஹிதுபுர பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், குருணாகல், கிரிமெட்டியாவ மற்றும் பதவிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26 முதல் 35 வயதுக்குட்பட்ட மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீட்டின் கீழ் உள்ள தரையில் புதையல் இருப்பதாக வீட்டின் பெண் உரிமையாளரிடம் ஒருவர் கூறியதையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரும் இணைந்து பெரும் பணத்தை செலவிட்டு வீட்டின் தரையை தோண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று வெள்ளிக்கிழமை (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17