அநுராதபுரம், மிஹிதுபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டியதாக கூறப்படும் வீட்டின் பெண் உரிமையாளர் உட்பட நால்வர் நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஹிதுபுர பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், குருணாகல், கிரிமெட்டியாவ மற்றும் பதவிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26 முதல் 35 வயதுக்குட்பட்ட மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீட்டின் கீழ் உள்ள தரையில் புதையல் இருப்பதாக வீட்டின் பெண் உரிமையாளரிடம் ஒருவர் கூறியதையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரும் இணைந்து பெரும் பணத்தை செலவிட்டு வீட்டின் தரையை தோண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று வெள்ளிக்கிழமை (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM