முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் நடவடிக்கைகளுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வாகனங்களுக்கு செலுத்தவேண்டிய 142 மில்லியன் ரூபா நிதியை வழங்காமை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் தமது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக, தமது ஆட்சேபனையை வௌியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இறுதி வாய்ப்பை வழங்கவே நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதி, விசாரணையை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM