சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.
பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் ரபெல் போர்விமானங்களும் அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா விமானங்களும் ஐஎஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது 7 குண்டுகளை வீசின என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2014 - 2015 முதல் சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவரும் சர்வதேச கூட்டணியில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM