நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்பு !

Published By: Digital Desk 2

02 Jan, 2025 | 11:20 AM
image

யாழ்.நெடுந்தீவிலிருந்து - குறிகாட்டுவான் நோக்கி பயணித்த பயணிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவில் இருந்து நேற்று புதன்கிழமை(01) பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட பயணிகள் படகானது நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்காமல் நின்றுள்ளது. 

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.

படகு கடல் கொந்தளிப்பினால் தத்தளித்த நிலையில் இதனை அவதானித்த மீன்பிடி படகுகள் கரைக்கு தகவல் கொடுத்த நிலையில், நெடுந்தீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான படகின் உதவியுடன் பயணிகள் படகு மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர். சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44