அமெரிக்காவில் சற்று முன்னர் நபர் ஒருவர் தான் செலுத்தி வந்த வாகனத்தினால் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பயங்கரவாத சம்பவம் இல்லை என அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை எவ்பிஐயின் அலித்தியா டங்கன் பொறுப்பேற்றுள்ளார்.
இது பயங்கரவாத சம்பவம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நியு ஓர்லியன்சின் மேயர் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கலாம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிரக் வண்டியொன்று வேகமாக வந்து பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அதிலிருந்த நபர் ஒருவர் இறங்கி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்,பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
30க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM