கடந்த வருடம் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் சாதனை

01 Jan, 2025 | 09:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2024ஆம் ஆண்டாகும். அதன் எண்ணிக்கை 3இலட்சத்தி 12ஆயிரத்தி 836 ஆகும். 

இதற்கு முன்னர் அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2022 ஆம் ஆண்டு என்பதுடன் கடந்த 6 வருடங்களில் 13 லட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.

அதன் பிரகாரம் 2024ஆம் ஆண்டில் 185162 ஆண் தொழிலாளர்களும் 127674 பெண் தொழிலாளர்களும் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதில் அதிகமானவர்கள் குவைட் நாட்டுக்கே சென்றுள்ளனர். 

அதன் எண்ணிக்கை 77546 பேராகும். அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கே அதிகமானவர்கள் தொழிலுக்காக சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 51550 பேராகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் காணப்படும் முக்கிய விடயம்தான், கடந்த வருடங்களுக்கு நிகராக  தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக இலங்கையர்கள் செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதாகும். 

அதன் பிரகாரம் 2024ஆம் ஆண்டில் தென்கொரியாவில் தொலுக்காக 7098பேரும் இஸ்ரேலில் தொழிலுக்காக 9665பேரும் மற்றும் ஜப்பானில் தொழிலுக்காக 8665 பேரும் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி அளவு இந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் அதிகருத்துள்ளது. 

அதன் பிரகாரம் 2024 நவம்பர் மாதம் முடிவடையும்போது 6462 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளது. அதேவேளை, 2023ஆம் ஆண்டு 297584 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருக்கின்றனர். அவர்களில்   132,904  பெண் தொழிலாளர்களும் 164680 ஆண் தொழிலாளர்களாகும்.

இதற்கு முன்னர் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2022ஆம் ஆண்டிலாகும். அதன் அளவு 310947 பேராகும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18