குழந்தையை தீ வைத்து கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட தாய்

01 Jan, 2025 | 04:59 PM
image

அநுராதபுரம், தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிதுன்கட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம், ஹித்தோகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த தாய் தனது பிரதேசத்தில் உள்ள மகளிர் சங்கத்தில் பொருளாளராக செயற்பட்டு வந்துள்ள நிலையில் சங்க உறுப்பினர்களுடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இதனால், இந்த தாய் தனது இரண்டு வயது குழந்தை மீது பெற்றோல் ஊற்றி குழந்தையை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு தன் மீதும் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உயிரிழந்த தாயின் கணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40