அநுராதபுரம், தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிதுன்கட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், ஹித்தோகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த தாய் தனது பிரதேசத்தில் உள்ள மகளிர் சங்கத்தில் பொருளாளராக செயற்பட்டு வந்துள்ள நிலையில் சங்க உறுப்பினர்களுடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இதனால், இந்த தாய் தனது இரண்டு வயது குழந்தை மீது பெற்றோல் ஊற்றி குழந்தையை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு தன் மீதும் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உயிரிழந்த தாயின் கணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM