2024 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்த்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.
குறிப்பாக வடமாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 946 வர்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 57 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் 774 விசேட சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 126 விசேட சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM