பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

Published By: Vishnu

01 Jan, 2025 | 01:47 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி சார்பில் முறைப்பாட்டை பதிவு செய்த சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவராலேயே இவ்வாறான பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியுடன் பல்வேறு விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பொய்யான தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இதில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது. அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்கள் இவ்வாறான மிக மோசமான போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கலுக்காக தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மிக மோசமான செயற்பாடாகும்.எனவே குறித்த நபரின் முழுமையான தகவல்களை நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம்.இது குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும்.அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03