சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 14 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இந்தியாவின் பெங்களூர் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் 125 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரான வர்த்தகர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM