அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (CERT) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனலை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட யூடியூப் சேனலில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM