மட்டக்களப்பு காவத்தமுனை வாகனேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட யானைக் குட்டி தொடர்பாக உள்ளுர் விவசாயிகளினால் கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் முதல் இவ்வயல் பகுதியில் தனிமையில் அலைந்து திரிந்த இந்த யானை உடல் மெலிந்து உணவு உட்கொள்ள முடியாத நிலையில் பலவீனமுற்ற நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காவத்தமுனை, மஜ்மா நகர் மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் அவற்றிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைத்துத் தருமாறு பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM