தலைவர் தலைவராகவே இருப்பார் - கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

28 Dec, 2024 | 03:26 PM
image

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எப்போதும் எமது கட்சித் தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு எடுப்பது வழமை. இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது.

இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான்.

வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை பதிவிட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

ஆகவே, அவரும் அந்த வழக்குகளில் பின்வாங்கினால் நானும் எனது வழக்குகளில் பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது. நாங்கள் கேட்டுக்கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறுதான். ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை  வெளியிடுகிறார்கள்.  தலைவர் தலைவராகவே இருப்பார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில்...

2025-03-16 15:50:34
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39