தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் கொலை !

Published By: Digital Desk 2

28 Dec, 2024 | 06:10 PM
image

பிலியந்தலை பிரதேசத்தில் தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான தந்தை, தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகமடைந்து மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 13 வயதுடைய இளைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் தனது வீட்டின் அறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ள நிலையில் அது தோல்வியடைந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21