ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் விரைவில் புதிய கூட்டணி - துமிந்த திஸாநாயக்க

Published By: Vishnu

27 Dec, 2024 | 10:02 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எம்முடன் இணையவுள்ளவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக மாத்திரம் கூட்டணி அமைக்கப்பட்டதே தவிர, நிரந்தரமாக எவ்வித கூட்டணியும் அமைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியமைத்த கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனிவரும் தேர்தல்களில் கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா,

ஒன்றிணைந்து பயணிக்க விரும்புபவர்களுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமையவே வெள்ளிக்கிழமை (27)  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுஜன ஐக்கிய முன்னணியாகவே நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். புதிய ஜனநாயக முன்னணியுடனான கூட்டணியை நீண்ட காலம் தொடரும் நோக்கில் நாம் செயற்படவில்லை.

அதனை பொதுத் தேர்தலின் போதும் தெரிவித்திருந்தோம். உத்தேச தேர்தல்கள் அனைத்திலும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த கூட்டணியின் ஒரு பங்காளியாகும். முற்போக்கு கொள்கையுடையவர்கள் அனைவரையும் ஒரே முகாமுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையே நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16
news-image

நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை...

2025-02-14 11:35:50
news-image

சாகும் வரை உண்ணாவிரதம்! - முள்ளிவாய்க்கால்...

2025-02-14 11:29:09
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்

2025-02-14 12:19:17
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு...

2025-02-14 11:19:04
news-image

பிடிகலயில் வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம்...

2025-02-14 12:47:19
news-image

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும்...

2025-02-14 11:23:09