(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டுக்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்ட ஐக்கிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக்க இடமளிக்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய செயலாளரும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக நானே இருக்கிறேன்.
பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் பெரும்பான்மையானவர்கள் என்னுடனே இருக்கின்றனர் என்பது ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் அனைவரும் தெரிந்த விடயம். என்றாலும் கட்சியில் இருக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் இந்த கட்சியை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது.
ஐக்கிய தேசிய கட்சி என்பது மக்களின் கட்சி. இதனை பாதுகாக்க வேண்டும். இதில் இருந்த பலர் தற்போது வெளியில் சென்றாலும் அவர்களை நாங்கள் மீண்டும் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும். ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக இடமளிக்க முடியாது. எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
அதனால் அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். நாட்டில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
நாட்டில் இருக்கும் மிகவும் பழைமை வாய்ந்த, நாட்டுக்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்ட இந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு செயற்படுவதால், அதன் பாதிப்பு எங்களுக்கே ஏற்படும்.
எனவே, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தூரமாகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் தலைதூக்கச் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM