முள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட உதைப்பாந்தாட்ட போட்டியில் மன்னார் பள்ளிமுனை சென்லூசியா விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்ததுடன் இரண்டு இலட்சம் ரூபா பணப் பரிசையும் தட்டிச்சென்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மன்னார் சென்லூசியா அணியும் யாழ்ப்பாணம் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணியும் மேதின.
போட்டி முடியும் போது இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்கள் பெற்ற நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தண்டனை உதைக்கு இரு அணிகளையும் ஏற்பாட்டாளர்கள் கொண்டு சென்றனர்.
இதன் போது 5 : 4 என்ற நிலையில் மன்னார் சென் லூசியா அணி முள்ளிவாய்க்கால் நினைவுக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இவர்களுக்கு நினைவு வெற்றிக் கிண்ணமும் இரண்டு இலட்சம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.
அத்தோடு இரண்டாவது இடத்தை பெற்ற யாழ் ஊரெழு றோயல் அணிக்கு நினைவு வெற்றிக் கிண்ணமும் ஒரு இலட்சம் ரூபா பணமும் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கிளிநொச்சி உதயதாரகை அணிக்கு வெற்றிக்கிண்ணமும் ஐம்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவாக அக்கினி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கில் இருந்து கலந்துகொண்ட 99 அணிகளுக்கிடையே கடந்த ஒரு மாததிற்கு மேலாக இடம்பெற்று வந்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது முள்ளிவாய்க்கால் நினைவாக நடத்தப்பட்ட இரண்டாவது உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM