பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி - ராகுல், பிரியங்கா கண்டனம்

27 Dec, 2024 | 11:52 AM
image

பாட்னா: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டதைப் போலவே வினாத்தாள் கசிவுகளால் வேலைவாய்பை தேடும் இளைஞர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் நான் ஏற்கெனவே பேசியிருந்தேன். இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (பிபிஎஸ்சி) எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் குரல் எழுப்புகின்றனர். ஆனால், தோல்வியை மூடிமறைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்துகிறது.

இது மிகவும் வெட்கக்கேடான செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். நீதி கிடைக்க போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சி எம்பி பிரியங்கா காந்தி வதேராவும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03