முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (26) கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கும்புறுமுல, யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இறால் பண்ணையில் வேலை செய்துவருவதுடன், சிலருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது தனிப்பட்ட முரண்பாடு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ, பலாகல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM