கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அது தற்போதைய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவின் பிரகாரம் ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாகக் கூறி அதன் தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை ஆரம்பித்தன.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடமையை செய்யாமல் தவிக்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் அறுபத்திரண்டு ஊழியர்களின் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் விசேட உத்தரவின் பேரில் அந்த ஊழியர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, இழந்த சலுகைகள் மற்றும் தண்டனைகள் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (24) எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM