மகசீன் சிறைக்கைதி ஜனாதிபதிக்கு கருணை மனு!

Published By: Robert

22 May, 2017 | 09:01 AM
image

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் அதற்குமேலதிகமாக 50 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவித்து வரும் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதிக்கு தனது ஆயுட்கால சிறைத்தண்டனையை சாதாரண சிறைத்தண்டனையாக குறைப்பதற்கு கருணை மனுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அறியாத ஒரு குற்றத்திற்காக கடந்த 24 வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.

இந்நிலையில் தயவு கூர்ந்து எனது இந்தக் கருணை வேண்டுகோளினை பரிசீலித்து நானுமொரு சாதாரண பிரஜையாக இந்நாட்டில் வாழ சந்தர்ப்பமளிக்குமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.

கடந்த 1993.09.27 அன்று வந்தாறு மூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனையும் அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியசிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

கருணை உள்ளம் கொண்ட ஜனாதிபதி எனது 43 வயதில் 24 வருட சிறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதை கருத்திற் கொண்டு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகிய தங்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கமைவாக எனது ஆயுட்கால சிறைத்தண்டனையினை சாதாரண சிறைத்தண்டனையாக குறைத்து தருமாறும் எனது வாழ்க்கையின் சத்தான இளமைக் காலம் கடந்து விட்ட நிலையில் மிகுதி வாழ்வுக்கேனும் ஒளியேற்ற உதவிடுமாறு மேலும் தனது கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08