பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் பிணை நிபந்தனையை மீறியமையால் கைது !

Published By: Digital Desk 7

24 Dec, 2024 | 05:59 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பிணையில் விடுவிக்கப்பட்ட சலிந்து மல்ஷிக குணரத்ன எனும் பாணந்துறை 'குடு சலிந்து'வை மீண்டும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை மேல் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிணை நிபந்தனை மீறிய காரணத்தினால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு திங்கட்கிழமை (23)  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார.

பயங்கரவாத செயல்கள் மற்றும் கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த சலிந்து மல்ஷிக குணரத்ன எனும் பாணந்துறை 'குடு சலிந்து கடந்த 2023 மார்ச் 07 ஆம் திகதி மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டதுடன் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். சுமார் 362 நாட்கள் சி.ஐ.டி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடு சலிந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த 20 ஆம் திகதி மீண்டும் பாணந்துறை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அதற்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு கடுமையான பிணை நிபந்தனைகளும் வழங்கப்பட்டன.

அவர் ஒவ்வொரு மாதமும் வாரத்தில் இரண்டாவது அல்லது நான்காவது நாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது மக்கள் முறைப்பாட்டுப்பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவ்வாறு முன்னிலையாகவில்லையாயின் அவரது பிணை இரத்து செய்யப்பட்டு இந்த வழக்கு முடிவடையும் வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே மொரட்டுவை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட வழக்கொன்றில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும்  நிபந்தனை விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 'குடு சலிந்து' ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிருக்க வேண்டும்.எனினும் அவர் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பாணந்துறை மேல் நீதிமன்றத்திலும்' மொரட்டுவை நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்பித்தனர்.

இதன் போது அதிகாரிகள் மன்றில் சந்தேகநபர் பிணை நிபந்தனையை மீறியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப் படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பிக்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.

எனினும் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி 'குடு சலிந்து' பிணை நிபந்தனை மீறியுள்ளமையால் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 'குடு சலிந்து' பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56