மிருகங்களை வேட்டையாடுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 7

24 Dec, 2024 | 05:27 PM
image

மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை (23)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதுடைய மதவாச்சி லேனதிவுள்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பயிர்செய்கை நிலத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நபர் வீட்டுக்கு வராத நிலையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் பொலிஸார் அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேடுதல் நடத்திய போது கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42