மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதுடைய மதவாச்சி லேனதிவுள்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பயிர்செய்கை நிலத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற நபர் வீட்டுக்கு வராத நிலையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் பொலிஸார் அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேடுதல் நடத்திய போது கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM