திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் வீட்டுக்குள் யானை புகுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
நேற்று வீட்டு உரிமையாளர் தூங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை வீட்டிற்குள் புகுந்துள்ளது.
இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அடிக்கடி யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலையில் உள்ளனர்.
பாதுகாப்பான யானை வேலி இன்மையால் காட்டு யானைகள் வீடுகளுக்குள் நுழைகின்றன.
ஆகையால் யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM