உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்நாட்டுத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , தம்பிலுவில் 02 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை , பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் வேலங்குளம் பகுதியில் , 02 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் பூவரசங்குளம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , வேலங்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM