கிண்ணியாவில் வெள்ளத்தால் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

22 Dec, 2024 | 01:25 PM
image

கிண்ணியாவில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

அதன்படி, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் வேளாண்மை நிலங்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. 

இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளில் புல் அதிகமாக காணப்படுவதாகவும்  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இதற்கான கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

இந்த விடயம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,  

பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எங்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு பதிலாக வைக்கோல் மட்டுமே மிஞ்சு உள்ளது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு தர வேண்டும். அதேபோல் வேளாண்மையும்  முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஆனால், வேளாண்மை மூலம் பத்தாயிரம் ரூபா கூட வராது.  

நாட்டில் அரிசியின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.

வேளாண்மை செய்யும் பகுதிகளை சுற்றி வெள்ளம் வராத அளவுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும். வௌ்ளம் காரணமாக 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49