கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்கம்முல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரழந்தவர் கிரிந்திவெல, திம்பிரிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
இந்த நபர் குத்தகை அடிப்படையில் காணி ஒன்றை கொள்வனவு செய்திருந்தார். அந்த காணியில் வசித்த காவலாளி ஒருவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் கொலையை செய்துவிட்டு உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM