மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு சென்ற மியன்மார் அகதிகள்  திருகோணமலைக்கு மீள அனுப்பப்பட்டனர்!

21 Dec, 2024 | 02:08 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலையில் இருந்து மிரிஹானை இடைத்தங்கல் முகாமுக்கு இன்று (21) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருகோணமலைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணலைக்கு கொண்டுசெல்லப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20) மாலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது தமது நாட்டில் வாழ முடியாத காரணத்தால் தமது நிலபுலங்களை விற்று, தஞ்சம் கோரி இலங்கைக்கு படகில் வந்ததாகவும் அந்த அகதிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் உள்நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களை கூட்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனையோரை முகாமில் தங்கவைக்குமாறும் நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) இரவு தங்கவைக்கப்பட்டிருந்த 104 மியன்மார் பிரஜைகளும் இன்று (21) காலை 7.30 மணிக்குப் பின்னர் பொலிஸாரினால் 2 பஸ்களில் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இந்நிலையில், இந்த பயணிகள் அடங்கிய பஸ்கள் இடைநடுவே சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து, பின்னர், பகல் வேளையில் திருகோணமலைக்கு அகதிகள் மீள அழைத்துச் செல்லப்பட்டனர். 

குறித்த மியன்மார் பிரஜைகளை மிரிஹானை முகாமில் தங்கவைப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காததன் காரணமாக அவர்கள் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், திணைக்களத்தின் அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் திங்கட்கிழமையளவில் குறித்த முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த மியன்மார் பிரஜைகளை யு.என்.எச்.ஆர் பிரதிநிதிகள் பார்வையிட்டதுடன் அவர்களிடமிருந்து தகவல்களையும் பதிவு செய்திருந்தனர். 

அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய தேவைகளை அரச திணைக்களங்களும் தொண்டர் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகானது வெள்ளிக்கிழமை (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

படகில் வந்தடைந்த மியன்மார் அகதிகளில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17