கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ; சந்தேக நபர் தப்பியோட்டம்

21 Dec, 2024 | 11:05 AM
image

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பல்லேவெல, ஹாபிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த பெண் தனது தந்தையின் சகோதரனுடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42