நத்தார் பண்டிகை, புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு

20 Dec, 2024 | 05:00 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதில் கொழும்பை மையப்படுத்தி மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில்  ஈடுபடுவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புது வருட பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட பொது இடங்களில் அதிகம் ஒன்று கூடுவர். 

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடளாவிய ரீதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதில் கொழும்பை மையப்படுத்தி மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுவர்.

இவர்களுள்  553 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதோடு, 600 பேர் போக்குவரத்து கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும்  500 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுவர். அத்துடன் புலனாய்வு பிரிவின் 48 உயர் அதிகாரிகள் மற்றும் அந்த திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 769 பேரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகம் இடம் பெறலாம். எனவே பொதுமக்கள் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது  மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

 அத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொள்ளும் தரப்பினர் மற்றும்  அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19