எவ்.ஏ. கிண்ணம் யாருக்கு? இராணுவம் - ஜாவாலேன் இன்று களத்தில்

Published By: Priyatharshan

20 May, 2017 | 10:12 AM
image

எவ்.ஏ. கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொடரில் சம்­பியன் அணியைத் தீர்­மா­னிப்­ப­தற்­கான, தொடரின் இறுதிப் போட்டி இன்று சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. 

இதில் நடப்புச் சம்­பியன் இலங்கை இரா­ணு­வப்­படை விளை­யாட்டுக் கழக அணியும் ஜாவா லேன் விளை­யாட்டுக் கழக அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. 

நடப்பு எவ்.ஏ. கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொடரில் முற்­றிலும் மாறு­பட்ட இரு அணிகள் சம்­பியன் கன­வுடன் மோத­வி­ருக்­கின்­றன. 

பல­மிக்க இரா­ணு­வப்­படை அணி­யா­னது டயலொக் சம்­பியன்ஸ் லீக் தொடரில் சோபிக்கத் தவ­றிய போதிலும், பலரும் எதிர்­பார்த்­ததைப் போன்றே இத்­தொ­டரில் தனது சம்­பியன் பட்­டத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் போராடி இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது. 

ஜாவா லேன் அணியோ டயலொக் சம்­பியன்ஸ் தொடரில் அடைந்த ஏமாற்­றத்­திற்கு ஈடு செய்யும் வகையில் சற்று முன்­னேற்­ற­க­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் மிகவும் சிறப்­பான ஆட்­டத்­துடன் பல­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது.

அதேவேளை இன்­றைய போட்­டியில் ஒரு மாற்­றத்தை ஏற்படுத்துவோம் என்று ஜாவாலேன் கழகத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப் போம் எவ்.ஏ. கிண்ணத்தை வெல்லப் போவது யார் என்று.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்