கந்தானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் காலி, இரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்திற்குக் கடந்த 13 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கி தாரிகள் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் காரரான “கந்தானை கொன்ட ரஞ்சி” என்று அழைக்கப்படும் திசாநாயக்க முதியன்சேலாகே ரஞ்சித் குமார என்பவரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கி தாரிகளுக்கும் உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, இரத்கம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM