நாயை பொல்லால் தாக்கி கொலை செய்த சகோதரர்கள் இருவரும் பிணையில் விடுதலை

19 Dec, 2024 | 06:01 PM
image

காலி, அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு காலி பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 37 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொட.ர்பில் தெரியவருவதாவது, 

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் இருவரும் காலி, அக்மீமன பிரதேசத்திற்கு கடந்த 11 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்றுள்ள நிலையில் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர், கொலை செய்யப்பட்ட நாயின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனியின் மறைவுக்கு...

2025-02-18 16:18:06
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23