காலி, அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு காலி பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 37 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொட.ர்பில் தெரியவருவதாவது,
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் இருவரும் காலி, அக்மீமன பிரதேசத்திற்கு கடந்த 11 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்றுள்ள நிலையில் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலை செய்யப்பட்ட நாயின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM