காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் தகராறு ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் காயம்

20 Dec, 2024 | 10:07 AM
image

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பட்டு மீயா” என்ற அனுர புஷ்பகுமார என்பவரின் சகாக்களுக்கும் “கரந்தெனிய சுத்தா“ என்பவரின் சகாக்களுக்கும் இடையிலேயே இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, "பட்டு மீயா" என்பவரும் அவரது சகாக்களும் காயமடைந்துள்ளனர்.

காலி மீட்டியாகொடை பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வீடொன்றில் வைத்து தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பாக “பட்டு மீயா” மற்றும் அவரது மூன்று சகாக்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“கரந்தெனிய சுத்தா“வின் சகாக்கள்  “பட்டு மீயா” என்பவரை கொலை செய்ய தயாராக இருந்ததாகவும் அதற்கு உதவி புரியும் ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலி சிறைச்சாலையில், கரந்தெனிய சுத்தாவின் சகாக்கள் இருந்துள்ள நிலையில் கரந்தெனிய சுத்தாவின் சகாக்கள் "பட்டு மீயா" மற்றும் அவரது சகாக்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, "பட்டு மீயா" மற்றும் அவரது சகாக்கள் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21