இறக்குமதி செய்யப்படும் 1 கி.கி அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 7

19 Dec, 2024 | 11:52 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரிசி உற்பத்தியாளர்கள் ஒருபுறம் மக்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள்,  மறுபுறம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அதிக வரியை அறவிட்டு பிழைக்கிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது.  சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின்  இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற  பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில்  உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில்  நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார்.  அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  அரிசி இறக்குமதிக்கான வரையறையை அரசாங்கம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. மறுபுறம் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி  பிரதான அரிசி  உற்பத்தியாளர்களிடம் 5 தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அரிசி உற்பத்தியாளர்களின்  கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டு  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில்  250 ரூபாவுக்கே  அரிசி விற்பனை செய்யப்படுகிறது.  அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி உற்பத்தியாளர்களே  அரிசியின் விலையை  இன்றும் தீர்மானிக்கிறார்கள்.

தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள். இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம்  அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை  நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள்.  அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.

வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும். இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும்.  

அரிசி உற்பத்தியாளர்கள் ஒருபுறம் மக்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள், மறுபுறம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அதிக வரியை அறவிட்டு பிழைக்கிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது.  சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின்  இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12