கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; முச்சக்கரவண்டி சாரதி கைது

19 Dec, 2024 | 10:40 AM
image

ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஆவார்.

மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபானம் அருந்துவதற்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றிற்கு நேற்று புதன்கிழமை (18) சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, கண்ணாடி போத்தல் ஒன்றினால் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00