எம்மில் சிலரது ஜாதகத்தில் பலன் அளிக்கக்கூடிய திசை மற்றும் புத்தி நடைபெறும். கிரகங்களும் கோச்சார ரீதியில் சுபமான இடத்தில் நின்று நல்ல பலன்களையே வழங்க கடமை பட்டிருப்பார்கள்.
ஆனாலும் அவர்களால் எந்தவித சுப பலன்களையும் பெற முடிவதில்லை. இது சில ஜோதிட நிபுணர்களுக்கு சவாலாகவும் , புதிராகவும் இருக்கக்கூடிய விடயம்.
ஆனாலும் எம்முடைய ஜோதிட நிபுணர்கள் இதுபோன்ற ஜாதகத்தில் சுப பலன்கள் கிடைக்காமல் இருப்பதற்கான சூட்சமம் என்ன ? என்பதனை ஆய்வு செய்து விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சூரியன் உள்ளிட்ட நவகிரகங்கள்.. உங்களுடைய ஜாதகத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தின் சாரத்தை பெற்று அமைந்திருக்கும்.
சூரியன் எந்த நட்சத்திரத்தில் நின்று இருக்கிறாரோ அந்த நட்சத்திரத்திற்கு எதிரிடை நட்சத்திரம் என்ற ஒரு சூட்சமம் இருக்கிறது.
அதாவது சூரியன் உங்களது ஜாதகத்தில் நின்ற நட்சத்திரத்தில் இருந்து 5,, 7, 8, 10, 12, 14, 15 , 21, 22, 23, 27 ஆகிய பனிரெண்டு நட்சத்திரங்கள் எதிரிடை நட்சத்திரங்கள் ஆகும்.
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து இந்த 12 நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களால் கிடைக்க வேண்டிய சுப பலன்கள் கிடைக்காது.
இதுபோல் சந்திரன் - செவ்வாய்- புதன்- குரு - சுக்கிரன் - சனி- ராகு - கேது- என ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிரிடை நட்சத்திரங்கள் உள்ளது.
உங்களுக்கு சுப பலன்களை அள்ளி வழங்கும் தசா புத்தியில் அந்த திசா நாதனுக்குரிய எதிரிடை நட்சத்திரத்தில் கிரகங்கள் இருந்தால்... அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறைவாக கிடைக்கும் அல்லது தாமதமாக கிடைக்கும் அல்லது தடையை ஏற்படுத்தும் . இதனால் குறிப்பிட்ட தருணத்தில் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் முழுமையாக கிடைப்பதில்லை.
இந்த எதிரிடை நட்சத்திரத்தின் வலிமையை குறைப்பதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்களும் , ஜோதிட நிபுணர்களும் சில எளிய வழிமுறைகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பிரத்யேக பரிகாரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் தானத்தை முதன்மை படுத்துகிறது.
அதாவது அனாதை இல்லங்கள் - ஆதரவற்றோர்- மாற்றுத்திறனாளிகள் - ஆகியவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் அன்ன தானம் வழங்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து வஸ்திர தானம் ,கல்வி கற்பதற்கான நிதி உதவி, கல்வி கற்பதற்கான பொருள் உதவி ஆகியவற்றையும் வழங்கிட வேண்டும்.
மேலும் ஆதரவற்றவர்கள் யாரேனும் மரணித்தால்.. அவர்களுடைய இறுதி காரியத்தை முழு மரியாதையுடன் செய்வதற்கு ஏதேனும் ஒரு வகையில் அதாவது உடலாலோ... பொருளாலோ.. உதவிட வேண்டும்.
இதனை நீங்கள் செய்யும்போதும் எதிரிடை நட்சத்திரத்தினால் பாதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் அகன்று, உங்களுக்கான சுப பலன்கள் அனைத்தும் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM