ஹோமாகம, பனாகொட, பெலதகொட, ரணவிருகம பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டின் மீது இன்று புதன்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் வியாபாரியொருவரின் திட்டத்துக்கு அமைய இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்தவர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்களை ஏற்கும் திறன் கொண்ட பிஸ்டல் ரக துப்பாக்கியால் சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளின்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு தோட்டாக்களையும் பயன்படுத்தப்படாத ஒரு தோட்டாவினையும் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் முன் வீதியில் காணப்பட்டது என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM