யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (17) உயிரிழந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
யாழின் பிரதான பகுதியிலுள்ள மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று படர்ந்து மின்சார கம்பிகளிலும் சுற்றிப்பரவி உள்ளது.
இதனைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கவனிக்காது விட்டிருந்த நிலையில் நேற்று மின்ஒழுக்கினூடாக கொடி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதன்போது எதேர்ச்சியாக குறித்த கொடியினை உணவாக உட்கொள்ள விளைந்த பசு மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை அவதானித்த குறித்த வீதியால் பயணித்தவர்கள் மற்றும் அருகில் இருந்த கால்நடை மருத்துவர்கள் என பலரும் குறித்த பசுவை காப்பாற்ற முற்பட்டனர்.
பசுவின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தமையினாலும் வீதியில் மழைநீர் தேங்கி நின்றமையினாலும் பசுவை காக்க முனைந்தவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.
எனவே அவர்கள் பசுவினை காக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது.
இது தினமும் பலரும் பயன்படுத்தும் பாதை என்பதனால் பசுவின் நிலை எவருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் பெறுமதிமிக்க பசுவின் உயிர்பறிக்கப்பட்டமைக்கு உரிய அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து பொதுமக்களும் அவ் வீதியால் பயணித்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்சார சபையினர் மின்னை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டர்கள் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் மின்சார அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மின்சாரசபையினர் தாம் பொறுப்பல்ல வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் யாழ்.மாநகர சபையே இதற்கு பொறுப்பு.
தாம் துரித சேவை இலக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனவும் எனவே தம்மால் ஒரே பகுதியில் அதிக நேரம் தரித்திருக்க முடியாது எனவும் தெரிவித்த மின்சாரசபை அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து விலகினர்.
எந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள குறித்த பசுவின் உரிமையாளர் தீர்மானித்தார்.
அசம்பாவிதங்கள் நடந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்காது இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM