(நெவில் அன்தனி)
ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) இரவு நடைபெற்ற மிகவும் இறுக்கமான லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியுடன் அங்குரார்ப்பண லங்கா ரி20 சுப்பர் லீக் கிரிக்கெட்டில் முதல் சுற்று நிறைவு பெற்றது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் ஹம்பாந்தொட்ட பங்களா டைகர்ஸ் 9 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை அடைந்தது.
கோல் மார்வல்ஸ் 7 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.
இன்று நடைபெற்ற கடைசி முதல் சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் அணி கடும் சிரமத்திற்கு மத்தியில் 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் வீரர் ஷக்கிப் அல் ஹசன் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 18 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட அலெக்ஸ் ஹேல்ஸ் (14) மட்டுமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சஹான் ஆராச்சிகே 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 9.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 6.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், மொஸாடெக் ஹொசெய்ன் 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் ஷெவன் டெனியல் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
அவர்களை விட தசுன் ஷானக்க (19), மொஹம்மத் ஷாஸாத் (13) ஆகியோரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அங்குரார்ப்பண லங்கா ரி10 பிறீமியர் லீக்கின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் ப்ளே ஓவ் சுற்று நாளை நடைபெறவுள்ளது.
ப்ளே ஓவ் சுற்றின் முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியை ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி சந்திக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை கண்டி போல்ட்ஸ் அணி எதிர்த்தாடவுள்ளது.
முதல் போட்டியில் தோல்வி அடையும் அணியும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாடும்.
முதலாவது தகுதிகாணிலும் இரண்டாவது தகுதிகாணிலும் வெற்றிபெறும் அணிகள் வியாழக்கிழமை (19) மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM