(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) இரவு நடைபெற்ற நுவர எலிய கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்ற கண்டி போல்ட்ஸ் அணி, கடைசி அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கண்டி போல்ட்ஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.
பெத்தும் நிஸ்ஸன்க 41 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 33 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு மதுஷன்க 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நுவர எலிய கிங்ஸ் 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கய்ல் மயர்ஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு கிளியை ஏற்படுத்தினர்.
கய்ல் மயர்ஸ் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்கள் உட்பட 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் நுவர எலிய கிங்ஸ் அணியின் ஆக்ரோஷம் அடங்கிப்போனது.
நுவர எலிய கிங்ஸ் அணியின் 5 விக்கெட்கள் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
ஒரு பக்கத்தில் திறமையாத் துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ 26 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஆனால் கண்டி போல்ட்ஸ் அணி ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதி பெறுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது.
பந்துவீச்சில் திசர பெரேரா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அரினெஸ்டோ வேழா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM