(எம்.மனோசித்ரா)
இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டு அறிவிப்பை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (17) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் திங்களன்று புதுடில்லியில் அறிவிக்கப்பட்ட கூட்டு அறிவிப்பில் இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேபோன்று பிராந்திய வலுசக்தி மற்றும் தொழிற்துறை மையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு (எட்கா) ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM