பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதகஹதோவ பிரதேசத்தில் கடந்த 02 ஆம் திகதி 44 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36, 44 மற்றும் 51 வயதுடைய கொடபோருவத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவர் மூன்று சந்தேக நபர்களுடன் இணைந்து காளான் பறித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டவரை உள்நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM