தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
'டாடா 'எனும் வெற்றி படத்தினை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் புதுமுக நடிகை டௌதி ஜிவால், சக்தி வாசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஃபேமிலி வித் எக்சன் என்டர்டெய்னராக இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'அகிலன்', 'பிரதர் : ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாததால் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்குவதாலும், தமிழகத்தின் காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலின் வாரிசான டௌதி ஜிவால் ஜீவா கதையின் நாயகியாக அறிமுகமாவதாலும் இப்படம் வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM