காட்டு யானையின் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் உளுக்குளம் பகுதியில் சனிக்கிழமை இரவு (14) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 ஆவது மைல் கல் பகுதி, மஹபுளங்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என்பது விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
யானையின் தாக்குதலில் உயிரிழந்தவருடைய சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM