தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, உயிரிழந்த நபர் ஒரு பெண் என தெரியவந்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதி தும்மலசூரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 39 வயதுடைய இளைஞனின் சடலம் தொடர்பில் குளியாப்பிட்டிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில், கொல்லப்பட்ட நபர் ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தும்மலசூரிய, சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் உள்ள பெரிய தோட்டமொன்றில் சில காலமாக வசித்து வந்ததாகவும் அவர் கைவிடப்பட்ட நாய்களை பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM